சென்னை: பாங்க் ஆப் மகாராஷ்டிரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. இது 27.1 சதவீத வளர்ச்சியாகும். பாங்க் ஆப் மகாராஷ்டிரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த வங்கி கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,40,561 கோடி கடன் வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 27.1 சதவீதம் அதிகமாகும். பிற பொதுத்துறை வங்கிகளை விட கடன் வழங்கலில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. ஐஓபி 16.43 %, பாங்க் ஆப் பரோடா 15.73 % , எஸ்பிஐ 13.66 % முந்தைய நிதியாண்டை விட கூடுதலாக கடன் வழங்கியுள்ளன.