சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி செலவில் விரைவில் 2 நடைபாதை பிளாசா அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில், பொதுமக்கள் வசதிக்காக, ரூ.45 ேகாடி மதிப்பில் 2 நடைபாதை பிளாசாக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இதில், உள்கட்டமைப்பு மற்றும் கல் போன்ற வடிவமைப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு வண்டிப்பாதை, கிரானைட் நடைபாதை, பிரத்யேக குழாய்கள், நவீன விளக்குகள், இருக்கைகள், தோட்டங்கள் போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி உயரதிகாரி கூறுகையில், ‘வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மிகவும் பழமையான வர்த்தக சாலையாகும்.