சேலம்: சேலத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடியை போலீசார் தேடி வரும் நிலையில், படுகாயம் அடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் முரளி(28). இவர் காந்தி ஸ்டேடியம் பின்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீரங்கனுக்கும்(35) பழக்கம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். சமீப காலமாக ஸ்ரீரங்கன் அழைத்தால், முரளி எங்கும் செல்வது இல்லை. இதனால் ரவுடி ஸ்ரீரங்கன் கோபத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில், வெளியே செல்ல வருமாறு முரளியை அழைத்தார். அவர் செல்ல மறுத்து விட்டார்.