சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டத்தின் போது, வீடுகள் தோறும் கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு விழா, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கருப்பண்ணசாமி பூஜை, கன்னிமார் பூஜை, அரண்மனை பொங்கல், சக்தி அழைத்தல் மற்றும் ஊர் பொங்கல், மாவிளக்கு பூஜைகள் விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.