நாமக்கல்: சுதந்திரன தின அமுதப்பெருவிழாவையொட்டி, இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு, பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர திருநாள், அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று(13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் குறைந்த விலையில் தரமான தேசிய கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.