குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (55). இவர் புரூஸ் என்பவரின் விசைப்படகில், கடந்த 9ம் தேதி மீன்பிடிக்க சென்றார். முட்டத்தை சேர்ந்த யூஜின் என்பவர் விசைப்படகை செலுத்தியுள்ளார். மேலும் 25 தொழிலாளர்கள் உடன் ெசன்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முட்டத்தில் இருந்து 42 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க சென்ற ஜஸ்டின் திடீரென படகில் மயங்கி விழுந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் உடனடியாக விசைப்படகை கரைக்கு திருப்பினர்.