செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்து வந்துள்ளார். அப்போது, சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பெற முயன்றுள்ளனர். இதனை கண்ட காவலர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, ஒழலூர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் கையில் இருந்த கத்தியை எடுத்து காவலரின் இடது தோள்பட்டையில் வெட்டி விட்டு இருவரும் தப்பியோடி உள்ளனர்.