காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை மின்வாரிய அலுவலகத்தின் வெளியே அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை விஷமிகள் சிலர் அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட அமைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.