×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த உணவகம்  உள்ளிட்ட 15 துறைக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சுற்றுலா துறை அமைச்சர்  2021-22ம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலா துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது, அத்தகைய முக்கியம். தமிழ்நாடு சுற்றுலா துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

இந்த விருதுகள் சுற்றுலா தொழில்முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை  செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிலையங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த உணவகம், சிறந்த சுற்றுலா  ஒருங்கிணைப்பாளர்  15 பிரிவுகளில் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் முதல்  27.9.2022 அன்று வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம்.

Tags : Kanchipuram District ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...