திருவள்ளூர்: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம் தோறு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிவித்தது. இதனையடுத்து திருவள்ளூர் கலெக்டர் உத்தரவின்பேரில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் வீடு, வீடாக தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார்.
பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 1232 வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார்.