திருச்செந்தூர், ஆக. 12: திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் நேற்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தி போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த்ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்டிஓ புஹாரி, நகராட்சி சேர்மன் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையர் வேலவன் முன்னிலை வகித்தனர்.