நெல்லை, ஆக. 12: நெல்லை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 9 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக மாநகர பகுதியில் 8 பேருக்கு தொற்று பரவி உள்ளது. அம்பை, வள்ளியூர் வட்டாரங்களில் தலா 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மானூர் வட்டாரத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற வட்டாரங்களில் நேற்று தொற்று பரவல் இல்லை.