வலங்கைமான், ஆக.12: வலங்கைமானில் அதிமுக நகர நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால் தலைமையில் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட நன்னிலம் தொகுதி எம்எல்ஏ காமராஜிற்கு பாராட்டுவது, வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கொசுத்தொல்லையால் அவதிப்படும் மக்களை காப்பாற்ற பவர் ஸ்பிரேயர் மூலம் கொசுமருந்து அடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வலங்கைமான் பேரூராட்சி தெருக்களில் தேங்கும் மழைநீரை வடியவிட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பராமரிப்பில் உள்ள நடுநாராசம்ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.