×

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ரூ.7.34 லட்சம் உண்டியல் வசூல்

திருவிடைமருதூர், ஆக.12: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமான ஜோதி மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 3 திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக சுமார் 7 லட்சத்து 34 ஆயிரத்து 455 ரூபாய் இருந்தது. இதையடுத்து இத்தொகை முழுவதும் கோயிலின் திருப்பணிக் கணக்கில் செலுத்தப்பட்டது. கோயிலின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. காணிக்கைகளை எண்ணும் பணியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags : Thiruvidaimarudur Mahalingaswamy Temple ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ