×

திருவிடைமருதூரில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்; ஏராளமானோர் பங்கேற்பு

கும்பகோணம், ஆக.12: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாபெரும் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 1,192 மனுக்கள் பெறப்பட்டது. திருவிடைமருதூர் தாலுக்கா, கலைஞர் பாசறையில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் முன் நின்று நடத்தும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாபெரும் கடன் வழங்கும் சிறப்பு முகாம் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது. முகாமை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

இந்த லோன் மேளாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான டாப்செட் கோ என்ற பிரிவின் கீழ், சிறு தொழில் வியாபாரத்திற்கான பொது கால கடன் திட்டம், பெண்களுக்கான கடன் திட்டமான சுய உதவிக்குழு தனிநபர்கடன், ஆடவருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை சிறு கடன் திட்டம், இரண்டு மாடுகளுக்கு ரூ..60 ஆயிரம் வரை கறவை மாடு கடன் திட்டம் உள்ளிட்டவைகளும், சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ என்ற பிரிவின் கீழ், அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலான தனிநபர் கடன், கவுன்சிலிங் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கடன், கைவினை கலைஞர் கடன் திட்டமான விராசத் உள்ளிட்டவைகளுக்கான லோன்களுக்கு மொத்தம் 1,192 மனுக்கள் பெறப்பட்டு லோன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvidaimarudur ,
× RELATED கும்பகோணம் அருகே ஆரியச்சேரி அரசு பள்ளியில் முப்பெரும் விழா