திருச்சி, ஆக.11: திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். திருச்சி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த ஜெய் (எ) ஜானகிராமன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜானகிராமன் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.