×

பாபநாசத்தில் அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஆக.11: பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சை கோட்ட பொறியாளர் பொருளாளர் குணசேகரன் தலைமை தாங்கினார் அஞ்சல் துறை தனியார் மயமாக்களே கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டி ஏ நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் கிளை செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Babanasam ,
× RELATED பாபநாசம் கல்லூரியில் 100% வாக்களிப்பது...