×

வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தோணுகால் கிராம மக்கள் மனு

கோவில்பட்டி, ஆக.11:  கோவில்பட்டி தாலுகா தோணுகால் கிராமத்தை சேர்ந்த இன்பராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாடசாமி மற்றும் பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்டிஓ நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் அளித்த மனு: எங்கள் ஊரில் விவசாயம் செய்து வருகிறோம். பெரியகுளம் கண்மாய் வாய்காலையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது அதேகிராமத்தை சேர்ந்த சிலர் குளத்துக்கு வாய்க்கால் கிடையாது என்று கல்தூண் ஊன்றி முள்வேலி அமைத்துள்ளனர். நீர்வழி வாய்க்காலையும் அழித்துள்ளனர். இதுகுறித்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே முள்வேலியை அகற்றி வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Tonugal ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...