வள்ளியூர், ஆக. 11: வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சபாநாயகர் அப்பாவு மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும் வகையில் மதிய உணவை சாப்பிட்டார். ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக 20 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதில்,வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை சபாநாயகர் திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பள்ளியில் வழங்கப்பட்டு வரும் மதிய உணவையும் சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், துணை தவைவர் கண்ணன், வார்டு கவுன்சிலர்கள் சிவராமகிருஷணன் குணசுந்தரி, மாணிக்கம், மாடசாமி, சசி, ஜோஸ்பின் ரஜேஸ்வரி, சுபாமுகிலன், ஆபிரகாம், உஷாமாணிக்கம், பொன்பாண்டி, திமுக பிரதிநிதி சிவனுபாண்டியன், 5வது வார்டு செயலாளர் சிபாமூர்த்தி, மாநில பேச்சாளர் பணிபாஸ்கர், திமுக பிரதிநிதி நம்பி, அன்பரசு, மாநில வர்த்தக அணி அமைப்பாளர் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி லெட்சுமணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தில்லைராஜா, பள்ளி தலைமையாசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.