×

வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது

மதுரை, ஆக. 10: மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(43). இவர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி.பாலம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தத்தனேரி கண்மாய்க்கரையை சேர்ந்த பாண்டி மகன் சுபாஷ் (எ) படையப்பா(24) இவரது சகோதரர் நாகராஜன்(19) ஆகிய இருவரும் செல்வத்தை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.675 ரொக்கத்தை பறித்துச்சென்று விட்டனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் சுபாஷ், நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ