மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது

மதுரை, ஆக. 10: மதுரை அருகே உள்ள திருநகர் ஹார்விபட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி(68). தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கூடல்நகர் பகுதியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றார். உறவினரை பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பினார். கூடல்நகர் ரயில்வே மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் தனுஷ்கோடி படுகாயமடைந்து மயங்கினார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவரை பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து விபத்தில் பலியான தனுஷ்கோடியின் மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில், தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமான பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சேர்ந்த கண்ணனை (51) கைது செய்தனர்.

Related Stories: