×

பாறைக்கு வெடி வைத்ததில் காயமடைந்த வாலிபர் பலி

சேலம், ஆக.10: சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரோசன் (38). இவர், அம்மாபேட்டை வரகம்பாடியில் வேங்கை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில்  இருந்த பாறையை வெடிவைத்து தகர்க்கும் பணியில் கடந்த மாதம் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பாறை ஒன்று வெடித்து சிதறியதில் ரோசன் மீது பட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வேங்கை ராஜேந்திரன், ரோசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். படுகாயமடைந்த ரோசன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்