தேன்கனிக்கோட்டை, ஆக.10: தேன்கனிக்ேகாட்டை அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், நண்பனை அடித்து கொன்ற 2பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கும்பார தெருவை சேர்ந்தவர் முத்தப்பன் மகன் சக்திவேல் (19). கார்பென்டர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 7ம் தேதி தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் நிலத்தில் அமர்ந்து நண்பர்களான தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த திம்மப்பா மகன் வரதராஜ்(21), கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (22) ஆகியோருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது சேகர், சக்திவேலிடம் இருந்த கூலிங் கிளாஸ் கண்ணாடியை பறித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது.