×

தஞ்சாவூரில் ஆபத்ைத உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

தஞ்சாவூர், ஆக.10: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டு மற்றும் பேருந்தின் மேற்பகுதியில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் பேருந்தில் நேற்று காலை 10 மணியளவில் இளைஞர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபடி இருந்தனர். இதையடுத்து அங்கு காவல் பணியில் இருந்த தஞ்சை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் இருந்த காவலர்கள் பேருந்தை மறைத்தனர்.

மேலும் இதையடுத்து படிக்கட்டில் நின்றவர்களுக்கு அறிவுரை கூறி காவலர்கள் பேருந்தின் உள்ள அனுப்பினார். பேருந்தின் உள்ள இடம் இருந்தும் படியில் தொங்கியவாறு பயணம் செய்வது வேதனை அளிப்பதாக சக பயணிகள் கூறினார். எனவே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்வதை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். ஓட்டுநர்களும் மாணவர்களை படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் கூறினார்

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...