×

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம், ஆக.10: ஜெயங்கொண்டம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (75). கூலி தொழிலாளி. இவர் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து முதியவர் வைத்திலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது