×

75வது சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்ட காங்கிரசார் பூலாம்பாடியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை 12கிமீ பாதயாத்திரை

பெரம்பலூர்,ஆக.10: பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின விழா பாதயாத்திரை பூலாம்பாடியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை 12கிமீ நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட காங் கிரஸ் கமிட்டியின் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின பவள விழாவை முன் னிட்டும், மத்திய பிஜேபி அரசு மக்களை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வந்து ள்ள விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விலை ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையிலும் மாபெரும் பாதயாத்திரை நேற்று(9ம்தேதி) பூலாம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கமிட் டியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை யில் துவங்கியது.

இந்த பாத யாத்திரையில் வட்டாரத் தலைவர்கள் சின்னசாமி ராஜேந்திரன், நகரத்தலை வர்கள் காமராஜ்,தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகி த்தனர். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர தலைவர் வழக்கறிஞர் அருண் பிர காஷ், மாவட்ட துணைத் த லைவர்கள் அருணாசலம், ஆசைதம்பி,விவசாய பிரிவு தலைவர் சித்தர், அமைப்பு சாரா தலைவர் ராஜா முக மது உள்ளிட்டப்பலரும் கல ந்து கொண்டனர். பூலாம்பா டியில் தொடங்கி, அரும்பா வூர், தழுதாழை, தாழைநகர், வெங்கலம்வழியாக கிருஷ் ணாபுரம்வரை 12கிலோமீட் டர் தூரத்திற்கு இந்தப் பாத யாத்திரை நடைபெற்றது.

Tags : 75th Independence Day Celebration ,Perambalur ,District ,Congress ,Phoolampady ,Krishnapuram ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...