கரூர், ஆக. 10: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதிக்கு விரைவில் குடிநீர் சப்ளை வழங்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, சணப்பிரட்டி போன்ற பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலை தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.