புதிய பென்ஷன் திட்டத்ைத ரத்து செய்யக்கோரி எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம்

கரூர், ஆக. 10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.கிளைத்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர் நன்றி கூறினார். பாரத் கவுரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

பணமாக்கல் என்ற பெயரில் ரயில் நிலையங்கள், மின்பாதை அமைப்புகள், கொங்கன் ரயில்வே, சரக்கு நிலையங்கள், சரக்கு பாதை, பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சொத்துக்களை விற்பனை செய்யக்கூடாது. ரயில்வே தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து, குறுகிய கால ஒப்பந்த ஊழியர்களை புகுத்தாதே, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, 2004க்கு முந்தைய ஒய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: