கரூர், ஆக. 10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.கிளைத்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தர் நன்றி கூறினார். பாரத் கவுரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.