கரூர், ஆக. 10: கரூர் ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம்கரூர் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வப்போது பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் வகையில், பணியாளர்கள், சாக்கடை மூடியை திறந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் கிழக்கு பகுதிச் சாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ஒரே சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.