வைகுண்டம்,ஆக.9: வைகுண்டம் அருகே ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததுடன், டிராக்டரை பறிமுதல் செய்தனர். வைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், திருட்டுத்தனமாக ஆற்று மணல் எடுத்து வந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குபதிவு செய்து டிராக்டரின் டிரைவர் பேட்மாநகரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் பலவேசம் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 யூனிட் ஆற்று மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.