தூத்துக்குடி,ஆக.9: ஆத்தூர்-புன்னக்காயல் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரிலிருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும், ஆத்தூரிலிருந்து குமார பன்னையூர், செல்வன் புதியனூர், புதுநகர் மற்றும் புன்னக்காயல் வரையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.