நெல்லை, ஆக. 9: தமிழக காங்கிரஸ் பொருளாளரான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, நடுவக்குறிச்சி பஞ்சாயத்து, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்திலும், டோனாவூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்திலும் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கினார். அப்போது உருக்குலைந்து காணப்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் சாலையை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசியபோது உத்தரவிட்டார்.