மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

ஈரோடு,  ஆக.9:  ஈரோடு மாவட்டம் எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(45).  விவசாயி. இவர், கடந்த 5ம் தேதி வீட்டில் உறவினர்களுக்கு கிடா விருந்து  வைத்திருந்தார். அப்போது, வீட்டின் மாடி படிகட்டில் ஏறும்போது, நிலைதடுமாறி  கீழே விழுந்தார். இதில், ரங்கசாமிக்கு பின் தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் ரங்கசாமியை மீட்டு கோபியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர்  மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரங்கசாமி உயிரிழந்தார். இதுகுறித்து  கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: