×

திருக்காட்டுப்பள்ளியில் மதுபாட்டில் விற்றவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஆக.9: திருக்காட்டுப்பள்ளியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி லயன்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அப்பகுதிக்கு சென்றபோது மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த மணிவேல் மகன் ராஜமாணிக்கம் (32) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தைகைது செய்தார்.

Tags : Thirukkatupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு