×

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்

புதுக்கோட்டை, ஆக.9: இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய நாட்டின் மூவண்ண கொடியை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்திய அஞ்சல் துறை முன்னெடுத்து தேசியக்கொடியை ரூ.25க்கு விற்பனை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று புதுக்கோட்டை அஞ்சல் கோட்டம் சார்பாக ஒரு விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதை புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி முன்னின்று துவங்கி வைத்தார்.

தலைமையிடத்து உதவி கண்காணிப்பாளர் கந்தசாமி, தலைமை அஞ்சலக அதிகாரி லலிதா மற்றும் அஞ்சலக ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். நடைபயணம் புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில் முடிவடைந்தது. நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜய மாணிக்கம் மாணவர்களை வைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நடைபயணத்தின் இறுதியாக மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் கண்காணிப்பாளர் நாட்டின் 75வது தேசிய கொடி திருவிழா கொண்டாட்டத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார்.

Tags : 75th Independence Day ,
× RELATED சுதந்திரம் பெற்ற அமிர்த காலம் மக்கள்...