கரூர், ஆக. 9: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 11 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கடவூர் தாலுகாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபர்கள் பயன்பெறும் வகையில் நாளை (10ம்தேதி) இடையப்பட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், 11ம்தேதி கொசூர் கிராமம், சமூதாய கூடத்திலும், 12ம்தேதி பாலவிடுதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், 13ம்தேதி வரவணை கிராமம், சமுதாய கூடத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.