×

108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது: அவசர காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆம்புலென்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டு

பள்ளிப்பட்டு: ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் சிறப்பாக செயல்ப்பட்டதில்  அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை அரசு ஆரம்பசுகாதாரர நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த பவித்ரா(22) என்ற பெண்ணுக்கு  பிரசவ வலி அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 108 ஆம்புலென்சில் பள்ளிப்பட்டிலிருந்து 108 ஆம்புலன்சின் டிரைவர் சிவக்குமார், மருத்துவ உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் கர்ப்பிணியை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு பிரசவவலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  3.1 கிலோ எடையுடன் பிறந்த அக்குழந்தை நலமாக இருப்பதாகவும், தாயும் சேயும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவசர காலத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட ஆம்புலன்ஸ்  பணியாளர்களுக்கு மருத்துவர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...