வீடு புகுந்து 8 பவுன் திருட்டு

அவனியாபுரம், ஆக.8: அவனியாபுரம் சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(53). இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார்.

நேற்று இரவு திரும்பிய போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் பீரோவும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த 8 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: