மதுரை, ஆக.8: மதுரை திருப்பரங்குன்றம், துர்கா தேவி காலனியைச் சேர்ந்த சரவணன் மகள் பத்மாதேவி(25). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், நம்பிக்கோட்டை சின்ராசுக்கும் 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் பத்மாதேவி புகாரில், மேலும் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ராசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.