×

6 பவுன் நகை வழிப்பறி

மதுரை, ஆக.8: மதுரை புட்டுத்ேதாப்பு ெசாக்கன் பட்டறைத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(45). இவர் நள்ளிரவு புட்டுத்தோப்பு ரோட்டில் உள்ள ஒரு டிங்கர் பட்டறை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள் பாண்டியராஜனை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் இவர்கள் 3 பேரும் சேர்ந்து திடீரென பாண்டியராஜனிடமிருந்த மோதிரம், செயின் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து டூவீலரில் தப்பிச்சென்று விட்டனர். கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது