பொள்ளாச்சி,ஆக.8: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகளில் நகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான கடைக்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தோடு அருகில் பயணிகள் பயன்பாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்துள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள இருக்கைகள் பல சேதம் காரணமாக, அதனை பயணிகள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.