இடைப்பாடி, ஆக.8: இடைப்பாடி ஆசிரியையின் வங்கி கணக்கில் ₹25ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி தாவாந்தெருவைச் சேர்ந்தவர் லதா(38). இவர் ஈரோடு மாவட்டம் கண்ணாமூச்சி அரசு பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுஇ வீட்டிலிருந்த லதாவின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் வங்கி கணக்குடன் பான் கார்டு எண்ணை உடனே இணைக்குமாறும், அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.