நாமக்கல், ஆக.8: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாமக்கல்லில் திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி., தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில் நாமக்கல்லில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ராமலிங்கம் எம்எல்ஏ, நகர செயலாளர்கள் பூபதி, சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைதி பேரணி நேதாஜி சிலை அருகில் இருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வழியாக, மோகனூர் சாலையில் அமைந்துள்ள அண்ணாசிலையை சென்றடைந்தது. பின்னர், அங்கு கலைஞரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி., தலைமையில் ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.