கஞ்சா விற்ற வாலிபர் கைது

உடுமலை, ஆக.6: உடுமலையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.உடுமலை காவல்நிலைய எஸ்ஐ சம்பத்குமார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருப்பூர் சாலையில், சின்னவீரம்பட்டி தனியார் மில் கேட் அருகே ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். போலீசார் விசாரணையில், அவர் கோட்டமங்கலத்தை சேர்ந்த பாலாஜி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: