கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்க அரசு நிதி உதவி

ஈரோடு,ஆக.6:  கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்க அரசு நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தழிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப அரசின் மானிய தொகையாக ரூ. 1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: