×

வங்கி சர்வர் முடக்கத்தால் அவதி

இளையான்குடி, ஆக.6: இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியில் நான்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்ய இங்கு வருகின்றனர். ஏற்கனவே பிஎஸ்என்எல் நெட்வொர்க் பிரச்சினை உள்ளதால் பணிகள் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், நேற்று வங்கிகளுக்கான சர்வர் முடங்கியதால், வங்கி இணையதளம் சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை சர்வர் செயலிழந்ததால் வங்கியில் பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்தனர். அதனால் வங்கிகளுக்கான சர்வரை சீரமைக்க வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைக்கிராமம் பகுதி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...