×

பேஸ்புக்கில் நட்பாக பழகி தனியார் வங்கி கேசியரிடம் ரூ.1.33 லட்சம் மோசடி

சிவகங்கை, ஆக.6: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன்(30). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கேசியராக பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பேஸ்புக் மூலம் வில்லியம் கிறிஸ்டியன் என்பவர் நண்பராக அறிமுகமானார். இருவரும் முகநூலில் பழகி வந்தனர். இந்நிலையில் பிரசன்ன வெங்கடேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பரிசு அனுப்பி உள்ளதாக வில்லியம் கிறிஸ்டின் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தொலைபேசி தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் பரிசு பொருளுக்கு வரி கட்ட சொல்லுகிறார்கள், எனவே உடனடியாக ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதை நம்பிய பிரசன்ன வெங்கடேசனும் அவர் கேட்ட தொகையை கடந்த மாதம் 29ம் தேதி அனுப்பி உள்ளார். அதன் பின்னர் வில்லியம்கிரிஸ்டியனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியாத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசன்ன வெங்கடேசன் சிவகங்கை எஸ்பி செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...