×

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 பேர் கைது

காரைக்குடி, ஆக.6: காரைக்குடியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.காரைக்குடி கழனிவாசல் காளீஸ்வரா பொட்டல் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, காரைக்குடி டிஎஸ்பி வினோஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அஜித் பாண்டி(21), ஆனந்த்(20), ரமேஷ்(21), நாகமுனீஸ்வரன்(23), அஜ்மல்கான்(22) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடமிருந்து சிறு சிறு பொட்டலங்களாக 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது
காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு