மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு

மதுரை, ஆக. 6: மதுரை ரயில்வே நிலையத்தில் சிறப்பு வருவாய் பிரிவு உள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த அறையை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது, முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கேபிள் வயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சீனியர் ஏரியா மேனேஜர் ராஜேஸ்வரி, கரிமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத சிலர், பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. பொருட்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: