குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் என்கிற நீர்வள மேலாண்மையின் குளங்கள் மற்றும் குட்டைகளை புதியதாக அமைத்தல் மற்றும் தூர்வாருதல் ஆகியவை குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வ.ராஜவேலு தலைமை வகித்தார்.

இதில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், நிலத்தடி நீர் திட்ட உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், ஊரக வளர்ச்சி உதவி செயற் பொறியாளர் சுமதி மற்றும் உதவி பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜல் சக்தி அபியான் என்கிற நீர்வள மேலாண்மை திட்டத்தின் மூலம் குளங்கள், குட்டைகளை புதியதாக அமைத்தல் மற்றும் தூர்வாருதல் ஆகியவை குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நீர் செரிவூட்டல் செயல் திட்டம் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Related Stories: